For Daily Alerts
Just In
இரு அணிகளும் இணையலாமா? என்னய்யா சொல்றீக?... மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை கட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு வருகிறார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை கட்சிஅலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு வருகிறார்.
புலி வருது, புலி வருது என்று கிராமப்புறத்தில் ஒருவர் குபீர் கிளப்பினார். அதுபோல் பேச்சுவார்த்தை இதோ அதோ என்று இந்த இரு அணிகளும் குபீர் கிளப்பி வருகின்றனர்.
அதிமுகவின் இரு அணிகளின் தொண்டர்களே சலித்து கொள்ளும் அளவுக்கு இவர்களது செயல்பாடுகள் அந்த அளவுக்கு வேகமாக உள்ளது. அதிமுக இணைந்தால்தான் இரட்டை இலை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதனால் இரு அணிகளும் இணைய முடிவு செய்தன. அதற்கு எத்தனை முட்டுக்கட்டைகள் வந்தாலும் அதை சரி செய்து இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தன. கடந்த சில நாள்களாக அஷ்டமி, நவமி என்று நாள் சரியில்லாத காரணத்தால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது.
Comments
English summary
CM Edappadi Palanisamy is discussing with State secretaries of ADMK for merger.
Story first published: Tuesday, April 25, 2017, 16:39 [IST]