தினகரனுக்கு 'நோஸ்கட்'! கட்சி, ஆட்சியை வழிநடத்துவது எடப்பாடிதான்... ஜெயக்குமார் பதிலடி!
கட்சி, ஆட்சியை வழிநடத்துவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என தினகரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை: அதிமுகவை வழிநடத்தப் போவதாக கூறிவரும் டிடிவி தினகரனுக்கு நோஸ்கட் கோடுக்கும் வகையில், அதிமுக கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
அதிமுக அணிகள் இணையாத நிலையில் கட்சியை வழிநடதுதும் பொறுப்பு தமக்கே உள்ளது; நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுக்க மாவட்ட நிர்வாகிகளுடன் ஆகஸ்ட் 5-ல் ஆலோசனை நடத்த உள்ளேன் என டிடிவி தினகரன் அறிவித்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி இதை ஏற்கவில்லை. தினகரனை ஒதுக்கி வைத்தது ஒதுக்கியதுதான் என்பதில் எடப்பாடி கோஷ்டி உறுதியாக உள்ளது.

எடப்பாடி தீவிர ஆலோசனை
இது தொடர்பாக கோட்டையிலும் அதிமுக தலைமை அலுவலகத்திலும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

இணைப்பையே விரும்புகிறோம்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சியுடன் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் அனைவருமே கூடிவந்தால் கோடி நன்மை என இரு அணிகளும் இணைவதைத்தான் விரும்புகின்றனர்.

கதவுகள் திறந்தே உள்ளன
அனைவரையும் அரவணைத்து செல்வதற்காகவே பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கிறது. அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது.

வழிநடத்துவது எடப்பாடிதான்
நாங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே ஓபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தை குழுவை கலைத்தபோதும் நாங்கள் கதவை மூடவில்லை. எங்களைப் பொறுத்தவரை அதிமுக கட்சியை, ஆட்சியை வழிநடத்துவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுகவை வழிநடத்தும் பொறுப்பு தமக்கே என தினகரன் கூறியிருந்த நிலையில் ஆட்சியை, கட்சியை எடப்பாடியே வழிநடத்துகிறார் என அதிரடியாக பேட்டியளித்திருக்கிறார் ஜெயக்குமார்.
-
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications