மத்திய அரசுக்கு நாங்கள் கூஜா தூக்கவில்லை... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
மத்திய அரசுக்கு நாங்கள் அடிமையாக இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: மத்திய அரசுக்கு நாங்கள் அடிமையாகவும் இல்லை, கூஜா தூக்கவும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழர்களுக்கு விரோதமான திட்டங்களை மக்கள் எதிர்த்தாலும், ஆட்சியாளர்கள் எதிர்க்கவே இல்லை. மத்திய அரசின் சிபிஐ ரெய்டுக்கு பயந்தே ஆட்சியாளர்கள் மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கு தலையாட்டி வருகின்றனர் என்ற பேச்சு நிலவி வருகிறது.
நீட் தேர்வு விவகாரத்தில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி உள்ளிட்டோர் பாஜகவுக்கு கூஜா தூக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் பேசின.
மத்திய அரசிடம் அடிமையாகவும் இல்லை, அவர்களுக்கு கூஜா தூக்கவுமில்லை. மாநில நலனுக்காகவே இணக்கமாக இருக்கிறோம்.
— Edapadi KPalaniswamy (@CMOTamilNadu) September 17, 2017
இந்நிலையில் இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில், மத்திய அரசிடம் அடிமையாகவும் இல்லை, அவர்களுக்கு கூஜா தூக்கவுமில்லை. மாநில நலனுக்காகவே இணக்கமாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு எதிர் வினைகளை ஆற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.