டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி.. 3 நாள் முகாம்.. பிரதமரைச் சந்திக்கிறார்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி போயுள்ளார். பிரதமர் மோடியை அவர் சந்திக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வரான பிறகு முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 3 நாள் பயணமாக அவர் போயுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கிறார்.
சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி, திடீர் திருப்பங்கள் காரணமாக முதல்வராக்கப்பட்டுள்ளார். முதல்வரான பின்னர் அவர் முதல் முறையாக இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

3 நாள் பயணமாக டெல்லி போயுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.அப்போது நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசவுள்ளார்.
எடப்பாடியார், முதல்வராக மோடியைச் சந்திப்பது இது 2வது முறையாகும். முன்னதாக சமீபத்தில் கோவைக்கு சிவன் சிலை திறப்பதற்காக மோடி வந்திருந்தபோது அவரை சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது டெல்லி சென்று சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications