முதல்ல சசிகலாவை நீக்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள்... எம்.பி.மைத்ரேயன் திட்டவட்டம்
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று எம்.பி.மைத்ரேயன் தெரிவித்தார்.
சென்னை: சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அக்கட்சி எம்.பி.மைத்ரேயன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது என்று முடிவு செய்யப்பட்டன. அப்போது பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகளின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
எனினும் யார் முதலில் சென்று பேச்சுவார்த்தையை தொடங்குவது என்று தயக்கம் காட்டி வந்தன. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் நிபந்தனைகளை விதித்தனர்.

கீழ் மட்ட தலைவர்கள் கருத்து
இந்த சூழ்நிலையில் மூத்த தலைவர்கள் பேசாமல் இருக்கும்போதும், எடப்பாடி அணியின் கீழ் மட்ட தலைவர்கள் ஆளாளுக்கு கருத்து தெரிவித்து வந்ததால் இரு அணிகளும் மோதி கொண்டன. மேலும் இது பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழலையும் உருவாக்கவில்லை.

இரு அணிகளும் பிடிவாதம்
சசிகலாவை நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினரும், அது முடியாது என்று எடப்பாடி அணியினரும் பிடிவாதமாக உள்ளன. மேலும் ஓபிஎஸ் அணியினரின் தொண்டர்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் தனித்து செயல்படலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

நீக்க வழி சொல்லுங்கள்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, பொதுக்குழு கூடி சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர் என்று கூறினார். மேலும் சசிகலாவை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்க முடியாது எனக் கூறிய தம்பிதுரை, சசிகலா நியமன விவகாரத்திற்கு, இரு அணியினரும் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும், சசிகலாவை நீக்க என்ன வழி என்பதை ஓபிஎஸ் சொல்லட்டும் என்றார்.

மைத்ரேயன் பதில்
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று எம்.பி. மைத்ரேயன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை தனி அணியாகவே செயல்படுவோம் என்றார் அவர்.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications