தமிழகத்தில் கல்வி மாவட்டங்கள் 120 ஆக அதிகரிப்பு.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
தமிழகத்தில் கல்வி மாவட்டங்கள் 120 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கல்வி மாவட்டங்கள் 120 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 68 ஆக உள்ள கல்வி மாவட்டத்தை அதிகரித்து 120 ஆக எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளை ஆய்வு செய்வது இதன் மூலம் எளிதாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரூ.9 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மொழிப்பாடங்களை ஒரே பாடமாக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications