பாஜக கூட்டணி குறித்து நாளைக்குள் முடிவு: இல.கணேசன் (அப்படி என்ன கூட்டணி வரப் போகுது?)
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து நாளை மாலைக்குள் முடிவு செய்யப்படும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் தெளிவு ஏற்பட்டுள்ளதாக இல.கணேசன் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர், "அதிமுகவுக்கு எதிரான சூழ்நிலை தமிழ்நாட்டில் அதிகமாகவே உள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளை அரசே திறந்து அதன் வருமானத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் வகையில் பாஜக வேகமாக செயல்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சரத்குமார் இணைந்ததில் எந்த வருத்தமும் இல்லை.
டாஸ்மாக் கடைகள் காரணமாக தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அதிமுக அரசு மீது குற்றம்சாட்ட பல காரணிகள் உள்ளது. தமிழக தேர்தல் கூட்டணி குறித்த எந்த கேள்விக்கும் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிப்பார். பாஜக கூட்டணி குறித்து நாளை மாலைக்கு அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
அப்படி என்ன கூட்டணி வரப் போகுது?.. பொறுத்துத்தான் பார்ப்போமே!