கேரளாவில் சோனியாவுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு! திமுகவுடனான கூட்டணி குறித்து ஆலோசனை
கோட்டயம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று கேரளாவில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது திமுகவுடனான கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
கேரளாவில் நாரயணகுரு பீடத்தை பாரதிய ஜனதா கட்சி வளைத்து தேர்தல் கூட்டணியாக மாற்றி வைத்துள்ளது. இதனால் ஈழவர் சமூகத்தின் வாக்குகள் கணிசமான அளவு பிரிந்து போயுள்ளன.

இந்நிலையில் கேரளாவின் வர்கலாவில் நாராயண குருவின் 83-வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய சோனியா, சமூக சீர்திருத்தவாதிகளை பாஜக சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறது; சமூகத்தில் பிளவை ஏற்படுத்தவும் அக்கட்சி முயற்சிக்கிறது என சாடினார்.
இதனிடையே கேரளாவில் சோனியாவை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீரென இன்று சந்தித்து பேசினார். அண்மையில் திமுக கூட்டணி குறித்து அழைப்புவிடுக்கும் போது காங்கிரஸை விலக்கி வைக்கமாட்டோம் என கருணாநிதி கூறியிருந்தார். இது குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications