ஓட்டுப் போட தூக்கி வந்த பாட்டியை வாசலோடு போட்டு விட்டுப் போன அதிமுகவினர்!
சென்னை: வாக்காளர்களின் காலில் விழுவார்கள், கையைப் பிடிப்பார்கள், தாடையைப் பிடித்துத் தடவுவார்கள், பாசமாக பேசுவார்கள். வேண்டியதைச் செய்கிறோம் என்று வசனம் பேசுவார்கள்.. ஆனால் வாக்குப் பதிவு முடிந்துதம் ஒரு நாய் கூட நம்மைச் சீண்டாது.
அதை இன்று ஓட்டுச் சாவடியிலேயே மக்கள் பார்த்து அதிர்ந்து போனார்கள்.

ஆர்.கே.நகரில் இன்று இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்களித்தனர். பல மூதாட்டிகள், வயதானவர்களை ஆட்டோக்களிலும், தோளில் போட்டு தூக்கியும் கூட்டி வந்தனர் பலர்.
அதிமுகவினர் பலர் வயதானவர்களை, முடியாதவர்களை ஆட்டோ வைத்து அழைத்து வந்தனர். ஆனால் ஓட்டுப் போடும் வரைதான் அவர்களுக்கு செம கவனிப்பு இருந்தது. ஓட்டுப் போட்டு முடித்ததும் அத்தனை பேரையும் அப்படி அப்படியே விட்டுச் சென்று விட்டனர்.
ஜீவா நகரில் உள்ள வாக்குச்சாடிக்கு வயதான மூதாட்டி ஒருவரை ஆட்டோவில் அழைத்து வந்த அதிமுகவினர், அவர் வாக்களித்ததும் அவரை அப்படியே விட்டு சென்றுள்ளனர். எவ்வளவோ சொல்லியும், சரியாக கண் தெரியாமலும் வயதான காலத்தில் உடல் முடியாமலும் இருந்த பாட்டியை அதிமுகவினர் அழைத்து வந்தனர். ஓட்டு போட்டு முடித்ததும் அப்படியே விட்டுப் போய் விட்டனர் என்றார் அவருடன் வந்தவர்.
பின்னர் அந்தப் பாட்டியை ஒரு ஆட்டோ பிடித்து நக்கீரன் பத்திரிகையாளர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications