'I' போட்டால் ராம்நாத்கோவிந்த்...'II' போட்டால் மீராகுமார்.. இப்படித் தான் ஓட்டு போடனுமாம்!
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்கள் ஓட்டளிப்பதற்காக தேர்தல் ஆணையம் சில விதிகளை கூறியுள்ளது.
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்பி, எம்எல்ஏக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று சில விதிகளை அவர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இந்தியாவின் முதல் குடிமகனை மக்கள் பிரதிநிதிகள் இன்று தேர்ந்தெடுக்கின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஏற்ப எம்பி, எம்எல்ஏக்களின் வாக்குக்கு மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் எம்பி, எம்எல்ஏக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இதன்படி எம்பிக்கள் வாக்களிக்க பச்சை நிற வாக்குச் சீட்டும், எம்எல்எக்கள் வாக்களிக்க பிங்க் நிற ஓட்டுச் சீட்டும் சட்டசபை செயலாளர் அலுவலகத்தில் இருக்கும். இந்த வாக்குச் சீட்டில் ஒன்று எனப் போட்டால் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு வாக்களித்தாக குறிக்கும், இரண்டு என்று போட்டால் காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாருக்கு ஓட்டு போட்டதாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒன்று, இரண்டு என்று எண்களில் போடாமல் ரோமன் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.
தேர்தல் ஆணையம் கொடுக்கும் பேனாவில் தான் இவற்றை எழுதி கொடுக்க வேண்டும், எம்பி, எம்எல்ஏக்கள் தங்கள் பேனாவில் எழுதி வாக்களித்தால் அவை செல்லாதவையாகிவிடும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஒன்று, இரண்டு தவிர வேறு எந்த கிறுக்கல்களும் வாக்குச் சீட்டில் இருக்கக் கூடாது என்பதோடு குறியீடுகள் ஏதேனும் அதில் இருந்தாலும் அவை செல்லாதவையாகிவிடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications