ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மோசம்.. மக்கள் ஆய்வு சர்வே பரபர!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மோசமாக உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மோசமாக உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பேராசிரியர் ராஜநாயகம். இவர் தலைமையில் மக்கள் ஆய்வு என்ற டீம் செயல்பட்டு வருகிறது.
இவர்கள் அவ்வப்போது தமிழகத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு அரசியல் கட்சிகளுக்கு பீதியளித்து வருகின்றனர். இந்நிலையில் அனைவராலும் உற்றுநோக்கப்படும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து இவர்களின் டீம் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
மக்கள் ஆய்வு கருத்துக்கணிப்பு
ஆர்கே நகரில் இன்றைய தேதியில் தேர்தல் நடத்தினால் யார் வெற்றி பெறுவார்கள், அக்கறையுள்ள நடிகர்கள் யார், முழுநேர அரிசியலுக்கு வந்தால் எந்த நடிகர் வெற்றி பெறுவார் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கருத்துக்கணிப்பு நடத்தினர்.
தேஆ செயல்பாடு மோசம்
அதன் ஒரு பகுதியாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி உள்ளது என்றும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மோசமாக உள்ளது என 64.8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என 18 சதவீதம் பேரும் சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை என 17.2 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சிக்கு முதலிடம்
அரசியல் செய்திக்கான முதன்மை ஊடகமாக ஆர்கே நகர் மக்களின் ஏகோபித்த ஆதரவை தொலைக்காட்சி பெற்றிருப்பதாக அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி 85.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
கைப்பேசிக்கு மூன்றாமிடம்
இளைஞர்களிடமும் தொலைக்காட்சியே செல்வாக்கு பெற்றிருப்பதாகவும் அந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. செய்தித்தாள் 8.9 சதவீத வாக்குகளையும் கைப்பேசி 3.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக மக்கள் ஆய்வு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.