ஆல்ரெடி வெயிலு கொளுத்தோ கொளுத்துனு கொளுத்துது... இதுல இவுக வேற!
சென்னை: ஆல்ரெடி வெயிலு கொளுத்தோ கொளுத்துனு கொளுத்துது....அதில் இவுக வேற படுத்தோ படுத்துனு படுத்துறாக. யாரைப் பத்தி சொல்றேனு நினைக்கறீகளா? வேற யாரு நம்ம அரசியல்வாதிக தான்.
தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யறோம் அப்படிங்கற பேர்ல இவுக எல்லாரும் பேசுற பேச்சு இருக்கே அப்போய் தாங்க முடியலைங்க.தொகுதி எங்க இருக்குனு கேட்டவக எல்லாம் இப்போ தேடி தேடி பக்கத்து தொகுதில கூட பிரச்சாரம் பண்றாங்கன்னா பார்த்துகுங்க.
வாங்க அந்தக் கூத்தையும் பார்த்துட்டு வருவோம்
அம்மானா சும்மா இல்லைடா! :
மொதல்ல நம்ம "அம்மா" பிரச்சாரம் பத்தி பார்ப்போம். எப்போவும் ஹெலிக்காப்டருலதான் போறாங்க,ஹெலிக்காப்டருலதான் வாராங்க. கரண்டு, தண்ணி இல்லாம மக்களெல்லாம் தவிச்சு கிடக்கறப்போ இவுக "செய்வீகளா?செய்வீகளா" அப்படினு கேட்டு மேலும் நல்லா "செய்றாக" பிரச்சாரம். எங்கன சுத்துனாலும் ரெங்கன சேவி அப்படினு அவுக வேலையிலேயே குறியா இருக்காக.
தானைத் தலைவா!! :
அடுத்து நம்ம திமுகவோட மு.க. ஸ்டாலின். அம்மா செய்வீர்களா என்று கேட்டால் இவர் மக்களை பார்த்து "நிலை என்ன? நிலை என்ன? " அப்படிங்கறாங்க. மக்களே, அவர்களுக்குள், எங்க நிலை என்னன்னே தெரியலையேய்யா என்று புலம்புகிறார்கள்.
நாந்தான் “கேப்டன்” ஆங்! :
நம்ம லிஸ்ட்ல அடுத்து வாரவுக நம்ம "கேப்டன்". நம்ம விஜயகாந்து தான்.இவக இருக்காகளே என்னமோ மக்களுக்கு எந்த கட்சிக்கு எந்த சின்னம்னு தெரியாத மாறியே "நாடாளுமன்ற கூட்டணி வேட்பாளரின் சின்னம் என்ன என்ன? " அப்படினு ராத்திரி 9 மணிக்கு கேட்கறார் மக்கள்ட்ட. நடுவில் வேற "முரசா? " அப்டினு வேற கேட்கறாக.
அண்ணீணீணீ!! :
இவுகதான் இப்படினா இவுகளோட மனைவி பிரேமலதா இருக்காகளே அவுக அதுக்கு மேல. "மாற்றத்தை தருவீகளா? " அப்படினு கேட்கறாக. "கூடிய சீக்கிரமே மக்கள் மாற்றத்தை தந்துருவாக. ஆனா,அது உங்க கட்சிக்கு நல்ல மாற்றமா,கெட்ட மாற்றமானு தேர்தலுக்கு அப்புறம்தான் தெரியும் அண்ணி அவர்களே" அப்படிங்கறாக சிலர்.
கோஷ்டி கோஷ்டியா கிளம்பிட்டாகயா:
இதெல்லாம் பத்தாதுனு இந்த நமோ, ஆம் ஆத்மி கோஷ்டிக வேற படுத்துராக. இவுக செய்றது அவுகளுக்கு பிடிக்கலை,அவுக செய்றது இவுகளுக்கு பிடிக்கலை. ஆனா, இவுகள்ளாம் சேர்ந்து செய்றது யாருக்குமே பிடிக்கலை அப்படிங்கறது பாவம் இவுகளுக்கு தெரியலை. இந்த காங்கிரஸ் கட்சில யார் யாரு இருக்காகனே சோனியா,ராகுல் அவுகளுக்கு தெரியலை பரிதாபம்.
நீதான கடைசியா என் கூட்டணில இருந்த?:
இதில் இந்த கூட்டணிக்கார சில்லுவண்டு கட்சிங்க பாடுதான் திண்டாட்டம்.யாரு கூட எப்போ கூட்டணில இருந்தம் அப்படிகறதேய் இவுகளுக்கெல்லாம் மறந்துருச்சினா பார்த்துக்கோக.
ஆக்டருங்க வேற...
ஒவ்வொரு கட்சிக்கும் ஆக்டர்க வேற வரிஞ்சு கட்டிகிட்டு ஓட்டு சேகரிக்கறாக. ஆனா,உங்களுக்கு மேல நாங்க சூப்பரா ஆக்டிங் குடுப்போம் அப்படின்னு மக்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது இவுகளுக்குத் தெரியுமான்னுதான் தெரியலை...ஏப்ரல் 24ம் தேதி தெரிஞ்சுரப் போகுது...