திராவிட கட்சிகளுக்கு தனிமனித தாக்குதல் மட்டும் தான் தெரியும்- ஞானதேசிகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடைபெற உள்ளது ஜனநாயகத்துக்கும் தனிமனித சர்வாதிகாரத்துக்கும் நடுவேயான தேர்தல் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நடைபெற உள்ள மக்களவை தேர்தல் ஜனநாயகத்துக்கும், தனிமனித சர்வாதிகாரத்துக்கும் நடுவேயான தேர்தல். காங்கிரசுக்கும், மோடிக்கும் நடுவேயான தேர்தலாகவே இது மாறியுள்ளது. வளர்ச்சிப்பணிகள் தொடர வேண்டுமானால் மீண்டும் ஐந்தாண்டுகள் மக்கள் காங்கிரசை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
திராவிட கட்சிகளை பொருத்தளவில் அவற்றுக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது. காழ்ப்புணர்ச்சியும், தனிமனித தாக்குதலும்தான் அவர்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications