தேர்தலில் விளையாடும் “பணநாயகம்” தடுக்கப்பட அவசரச்சட்டம் தேவை – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் தருவோர், வாங்குவோரை தண்டிக்க அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஸ்ரீரங்கத்தில் பணநாயகம் தான் நடைமுறையில் உள்ளது" என்று குற்றம் சாட்டினார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.
மேலும், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இதனை தெரிவித்தார். 2016 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியை தயார் செய்வது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications