பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு: விவசாயிகளுக்கு தொல்லையாய் மாறிய நடிகர் மாதவன்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால் மற்றும் புறம்போக்கு நிலங்களை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ள நடிகர் மாதவன் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்.
கொடைக்கானல் மற்றும் அதனையொட்டியுள்ள இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் திரைப்பட மற்றும் அரசியல் பிரபலங்கள் நிலங்கள் வாங்கிப் போட்டுள்ளனர்.

விலாங்கோம்பை அடுத்துள்ள தேக்கன் தோட்டம் பகுதியில் டிடிஎல் பாசன வாய்க்கால் உள்ளது. கொடைக்கானல் மலையிலிருந்து பழனி பகுதியில் உள்ள கண்மாய்களுக்குச் செல்லும் இந்த வாய்க்கால் மூலம் தேக்கன் தோட்டம் பகுதியில் 50 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்நிலையில், தேக்கன் தோட்டம் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள திரைப்பட நடிகர் மாதன், 50 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயை ஆக்கிரமித்ததுடன், மின்வேலியும் அமைத்துள்ளார். இதனால் விவசாயிகளின் பாசன உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு இரண்டு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதுதான் கொடுமை.
அந்தப் பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளின் நிலங்களையும் கணிசமான விலைக்கு வாங்கிக் கொள்வதாக மாதவன் கூறியதைத் தொடர்ந்து, இந்த அரசு அதிகாரிகளே புரோக்கர்களாக செயல்பட்டு நிலங்களை வாங்கிக் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளார்களாம்.
இது குறித்து, வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications