ஏப்ரல் 25 முதல் பொறியியல் விண்ணப்ப விநியோகம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
இதனை, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர், "பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கும். இதற்கென 2 லட்சத்து 90 ஆயிரம் விண்ணங்கள் தயார் நிலையில் உள்ளன. 60 மையங்கள் மூலம் விண்ணப்பங்களை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

விண்ணப்ப விநியோகம் மற்றும் பொறியியல் கவுன்சிலிங் தொடங்கும் தேதி உயர்கல்வித்துறை செயலரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமையோடு முடிவடைய உள்ள நிலையில்,அவர்கள் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை எவ்வித சிரமங்களும் இன்றி பெற சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications