10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- பொறியியல் பட்டதாரி கைது

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறியியல் பட்டதாரி வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள வெட்டுக்காடு அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர், அருகிலுள்ள திருமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இதே பகுதியை சேர்ந்தவர் கவிமகன், பொறியியல் பட்டதாரி. இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்ற முறையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவி கடந்த சில தினங்களாக, கவிமகனிடம் பேசவில்லை. இதையடுத்து அவர் பள்ளிக்கு சென்ற மாணவியிடம் வாக்குவாதம் செய்து கையை பிடித்து இழுத்து அடித்து, பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிமகனை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+