ஈரோடு அருகே மரத்தில் மோதி தீப்பிடித்த ஆம்புலன்ஸ்: 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
ஈரோடு: ஈரோடு அருகே சாலையோர மரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மோதி தீப்பிடித்ததில், அதில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு அருகே நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். கதிர்வேலுடன் அவரது மனைவி செல்லம்மாள், மகன் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் உடன் சென்றனர்.

மொடக்குறிச்சிக்கு அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதி தீப்பிடித்தது. இதில், ஆம்புலன்சில் பயணம் செய்த லட்சுமி, செல்லம்மாள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் தங்கராஜ் ஆகியோர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கதிர்வேல் மற்றும் பாலசுப்பிரமணியன், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் ஈரோடு-வெள்ளக்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications