சோளப்பயிருடன் சேர்த்து “கஞ்சா” விவசாயம் - ஈரோட்டில் இருவர் கைது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் சோளப்பயிருக்குள் ஊடுபயிராக போதைச் செடியான கஞ்சா பயிரிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சின்னச்செங்குளம் பகுதியில் சோளப்பயிரின் இடையே கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக பர்கூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

Erode farmers arrested for cannabis farming

இதையடுத்து, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜானகிராம், அந்தியூர் காவல் ஆய்வாளர் சுகவனம், அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஜான் பிரிட்டோ உள்ளிட்ட போலீஸார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள சோளக்காட்டில் சோதனை செய்தபோது கிட்டதட்ட ஒரு ஏக்கர் பரப்பளவில் சோளபயிர்க்ளுக்குள் ஊடுபயிராக சுமார் 5 அடி உயரத்துக்கு 65 கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பது தெரிந்தது.

இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தம்பி, நாகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கெஞ்சன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+