தடையே வந்தாலும் திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை நடத்தப்படும்: அரசு ஊழியர்கள் அறிவிப்பு
தடை விதித்தாலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஈரோடு: அரசு தடை செய்ய முயற்சித்தாலும் திட்டமிட்டபடி நாளை மறுநாள் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அலுவலக கட்டிட திறப்பு விழா ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்த சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த போராட்டத்திற்கு செல்வதற்கான வாகனங்கள் அரசு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக தடுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசு ஊழியர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முயற்சிப்பதாகவும் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் சங்க தலைவர் சுப்பிரமணியம் வலியுறுத்தினார். மேலும் தங்களது முற்றுகை போராட்டத்திற்கு அரசு தடை செய்ய முயற்சித்தாலும் திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என அவர் உறுதிபட தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications