ஈரோடு சிறுமி பலாத்கார வழக்கு – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் கமலாநகர் 3 ஆம் வீதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அச்சிறுமியை 60 வயதான சுந்தர ராமலிங்கம் என்ற முதியவர் நைசாக பேசி அழைத்துச் சென்று மானபங்கம் செய்துள்ளார்.
இதுபற்றி தேவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இந்த சம்பவம் பற்றி கருங்கல் பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சுந்தரமகாலிங்கத்தை கைது செய்தனர்.
அவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 1 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications