5 முனை போட்டி.. ஒரே ஒரு வாக்கு கூட வெற்றியை மாற்றி நிர்ணயிக்கலாம் - அரசியல் வல்லுனர்கள்
சென்னை: தமிழகத்தில் கட்சிகளுக்கிடையே தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகின்றது. இந்த கடுமையான சூழலில், ஒரே ஒரு வாக்கு கூட வெற்றியை நிர்ணயிக்கலாம் என்ற நிலையை இது உருவாக்கியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றிருந்தன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பாஜக கூட்டணியில் சிறிய கட்சிகளும் இடம் பெற்று இருந்தன.
தேமுதிக தனித்து போட்டியிட்டதால் 4 முனை போட்டி நிலவியது.

திமுகவுக்கு அதிக வெற்றி:
அத் தேர்தலில் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும், திமுக கூட்டணி 27 இடங்களிலும் வெற்றி பெற்றது. தனித்து போட்டியிட்ட தேமுதிக எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை என்றாலும், பெருவாரியான வாக்குகளை பெற்றிருந்தது.

பல தொகுதிகளில் பிரிந்த வாக்குகள்:
இதனால் பல தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிக்கும் அடுத்து இடம் பிடித்த கட்சிக்கும் இடையே வாக்கு வித்தியாசம் மிக குறைவாகவே இருந்தது.

5 முனைப் போட்டி:
கடந்த பாராளுமன்ற தேர்தலை விட தற்போது 5 முனை போட்டி உருவாகியுள்ளது. அதிமுக தனி அணியாகவும், திமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஒரு அணியாகவும், பாஜக கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஒரு அணியாகவும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் ஒரு அணியாகவும், கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு அணியாகவும் என 5 முனை போட்டி உருவாகியுள்ளது. இதனால் கட்சிகளின் வாக்குகள் வெகுவாக பிரியும் நிலை உருவாகியுள்ளது.

குறைந்த சதவீதத்தில் வெற்றி தோல்வி:
குறைந்த சதவீத வாக்குகளே வெற்றி,தோல்வியை நிர்ணயிக்க இருக்கிறது. இதனால் வாக்குகளை சிதறாமல் பார்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தற்போது தீவிர பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர்.

”ஒரே ஒரு வாக்கு” கூட:
"ஒரே ஒரு வாக்கு" கூட வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் நிலை இந்த தேர்தலில் உருவாகலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

பொதுவான வாக்காளர்கள்:
கட்சி ஆதரவாளர்களை தாண்டி பொதுப்படையான வாக்காளர்களே வெற்றியை நிர்ணயிக்க இருக்கிறார்கள். அதிலும் புதியதாக வாக்களிக்க இருக்கும் இளைய சமுதாயத்தினரே மத்தியில் ஆட்சி அமைக்கிறவர்களை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்களாக உருவாகியிருக்கிறார்கள் என்றால் அதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இதனால் இந்த தேர்தல் எந்த விதத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications