For Daily Alerts
Just In
சக்சேனா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்- ஈ.வி.கே.எஸ்
சென்னை: ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் தமிழக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மீது தலைமைத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ஜனநாயகம் இதுவரை காணாத தேர்தல் மோசடிகள் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அரங்கேற்றப்பட்டு வருவதாகக் கூறியுள்ள இளங்கோவன், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தேர்தல் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்
தமிழக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மீது தலைமைத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், சக்சேனா மீது வழக்கு தொடருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
evks elangovan sandeep saxena election commission rk nagar bypoll ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தீப் சக்சேனா தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்தல்
English summary
TNCC leader EVKS Elangovan urged the election commission has take action against CEO Sandeep Saxena.
Story first published: Tuesday, June 23, 2015, 18:03 [IST]