தமிழகத்தின் தவிர்க்க இயலாத சக்தி ஜெயலலிதா - ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சாதித்த பெண்மணி, தமிழகத்தின் தவிர்க்க முடியாது சக்தியாக திகழ்பவர். அவர் பூரண குணமடைய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்சி பேதம் பார்க்காமல் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா குணமடைய வாழ்த்து கூறி வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் நடிகர் சிவாஜி பேரவையின் சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், தலைவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது இயற்கையானது. ஆனால், மருத்துவமனையை முற்றுகையிடுவதும், பூசணிக்காய் உடைப்பதும் எந்தவகையில் நியாயம்? இது பொது மக்களுக்கும், நோயாளிகளுக்கும் இடைஞ்சலாக இருக்காதா? என்று கேட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சாதித்த பெண்மணி, தமிழகத்தின் தவிர்க்க முடியாது சக்தியாக திகழ்பவர். அவர் பூரண குணமடைய வேண்டும் என வாழ்த்தினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் அரசு இது போன்ற சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழக முதல்வர் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் கடுமையான சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், அதிமுக தொண்டர்கள் அவருக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டங்களில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்து அதிமுக மீண்டும் வென்று முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட பின்னர் இப்போது உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை பாராட்டி பேசியுள்ளார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.












Click it and Unblock the Notifications