விஜயகாந்த் கூட சேர்ந்துட்டாருல்ல.. அதான்.. மைக்கை தூக்கிப் போட்ட வைகோ குறித்து இளங்கோவன்!
சென்னை: விஜயகாந்த்துடன் சேர்ந்து வி்ட்டார் இல்லையா. அதுதான் வைகோ இப்படியெல்லாம் நடக்க ஆரம்பித்துள்ளார் என்று பாலிமர் டிவி செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் மைக்கை எடுத்துப் போட்டு விட்டு வைகோ போனது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வைகோ அவர்கள் தொலைக்காட்சியின் பேட்டியின்போது, நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மைக்கை தூக்கி எறிந்துவிட்டு அவர் பாதியிலேயே கோபமாக எழுந்து சென்றுவிட்டார். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால், சகவாச தோஷம்தான்.

விஜயகாந்த் அங்கே சேர்ந்திருக்கின்றார். ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளை மற்றவர்களும் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதுதான் வைகோவின் நடவடிக்கை காட்டுகிறது.
திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இரண்டு நாளில் அறிவிக்கப்படும். அதன்பிறகு எந்தெந்த தொகுதி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் என்று அறிவிக்கப்படும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications