ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டன- தாமதமாக புறப்பட்டன ரயில்கள்!
சென்னை: இலங்கையில் 5 தமிழக மீனவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தால் நேற்று ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் இன்று முழுமையாக இயக்கப்பட்டன. இருப்பினும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தாமதமானால் ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதியன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேர் போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கொழும்பு உயர்நீதிமன்றம் 5 தமிழக மீனவருக்கும் நேற்று தூக்கு தண்டனை விதித்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டதால் அப்பகுதியே நேற்று பற்றி எரிந்தது. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டதால் ராமேஸ்வரத்துக்கான அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
பின்னர் தமிழக அரசுத் தரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றதால் போராட்டத்தைக் கைவிட்டு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் இன்று இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5 மணிக்குப் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 9 மணிக்கு புறப்படும்;
நேற்று இரவு 8 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம்- சென்னை சேது எக்ஸ்பிரஸ் இன்று காலை 9.30 மணிக்கு புறப்படும்;
நேற்று இரவு 8.45 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் -குமரி ரயில் இன்று காலை 10 மணிக்கு புறப்படும்;
இன்று காலை 5.35 மணிக்குப் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - மதுரை ரயில் காலை 10.30 மணிக்கு புறப்படும்;
இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால் ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தொடர்வதால் அறிவித்தபடி ரயில்கள் எதுவும் புறப்படவில்லை. தண்டவாளங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு ரயில்கள் புறப்பட பல மணி நேர தாமதமாகும் எனத் தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications