வர்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வந்து விட்டது பேஸ்புக் ஃசேப்!
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருப்பதி, பெங்களூர் மக்களுக்கு பேஸ்புக் ஃசேப் உதவிக்கரம் நீட்டுகிறது.
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவிக்கரம் நீட்டுகிறது பேஸ்புக் ஃசேப் ஆப்ஷன்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் நாட்டில் 'பேஸ்புக்' பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல கோடியாகும். வர்தா புயல் பாதித்த சென்னையில், நண்பர்கள் பாதுகாப்பாக உள்ளனரா? பாதுகாப்பு இன்றி, உதவி எதிர்பார்க்கின்றனரா என்பதை, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், 'பேஸ் புக்', தனது பக்கத்தில், நேற்று முதல் சிறப்பு வழிமுறைகளை இயக்கி வருகிறது.

சென்னை, திருப்பதி, புதுச்சேரி, பெங்களூர் பகுதியை இருப்பிடமாக பேஸ்புக்கில் பதிவு செய்தவர்களின் 'பேஸ்புக்' பக்கத்தில், 'சேப்', 'அன்சேப்' என்கிற இருவகை 'ஆப்ஷன்' கொடுக்கப்பட்டுள்ளன. உதவி கிடைக்காதோர், 'அன்சேப்' வழிமுறையை தேர்வு செய்து, தனது இருப்பிடம், தேவைப்படும் உதவியை பதிவுசெய்தால், உடனடியாக, வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களுக்கு, அத்தகவல் சென்றடைகிறது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள், பாதுகாப்பான இடங்களில் உள்ள நண்பர்கள் மூலம், உதவி பெற முடியும்.
பாதுகாப்பாக உள்ள நபர்கள், தாங்களே சுயமாகவே, 'சேப்' என்கிற வழிமுறையை தேர்வு செய்தால், அனைத்து நண்பர்களுக்கும், பச்சை நிற 'டிக்-மார்க்' உடன், சம்பந்தப்பட்டவர் பாதுகாப்பாக உள்ளார் என, தகவல் சென்றடைகிறது.நண்பர், உறவினர் பாதுகாப்பாக உள்ளார் என, நன்கு தெரிந்திருப்பின், அவரது நட்பு வட்டத்தில் உள்ள வெளிநபர்களும், சென்னை நண்பருக்கு பதிலாக, 'சேப்' என்கிற தேர்வை பதிவு செய்து, அனைவருக்கும் தெரிவிக்கலாம்.
cyclone vardah என்ற பெயரில் இந்த ஆப்ஷனை பேஸ்புக் கொண்டுவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையை பெருவெள்ளம் புரட்டி போட்டபோதும், பேஸ்புக் இதேபோன்ற உதவியை செய்தது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications