திருபுவனத்தில் டாஸ்மாக் முன்பு பயங்கரம்.. சரக்கு வாங்க வந்த பிரபல ரவுடி.. சரமாரியாக வெட்டி கொலை
தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் டாஸ்மாக் மதுக்கடை அருகே நடுவக்கரை ரவுடி சரண்ராஜ் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில். திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நடுவக்கரை வடக்கு தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சரண்ராஜ் (வயது 30). இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.

திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் இரவு சரண்ராஜ் சென்றார். அங்கு மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஏற முயன்றார். அங்கு வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சரண்ராஜை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் சரண்ராஜ்ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் காங்கேயம் பேட்டையை சேர்ந்த சிலருக்கும் நடுவக்கரை சரண்ராஜ்க்கும் முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இப்படுகொலைச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுவக்கரை சரண்ராஜ் படுகொலைச் சம்பவம் திருவிடைமருதூர், திருபுவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications