கருகிய மஞ்சள் பயிர்கள்.. விளைநிலத்தியே பூச்சி மருந்து குடித்து உயிரை மாய்த்த விவசாயி!
ஈரோடு விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு: தண்ணீர் இல்லாமல் மஞ்சள் பயிர்கள் கருகிப் போன வேதனையை தாங்க முடியாமல் ஈரோடு மாவட்ட விவசாயி ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதுமான மழையும் இல்லை; தமிழகத்துக்கு வர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவும் இல்லை. இதை தட்டிக்கேட்க வேண்டிய மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சியில் உயிரை விடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஊஞ்சலூர் காட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தம்முடைய விளைநிலத்திலேயே பூச்சி மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் வராததால் அவரது நிலத்தில் பயிரிட்டிருந்த மஞ்சள் கருகிப் போனது. இதை தாங்க முடியாமல் ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விவசாயிகளிடையே பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications