கொடுமை.. பயிர் கருகியதால் மனம் உடைந்த விவசாயி தீக்குளித்து தற்கொலை.. திருவாரூரில் சோகம்
நீரின்றி பருத்தி கருகியதால் மனம் உடைந்த விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் திருவாரூரில் பதற்றம் நிலவி வருகிறது.
திருவாரூர்: நீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்த மனவேதனையில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து விவசாயிகளின் தற்கொலை நடைபெற்று வருவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் காப்பணாமங்கலம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ். 45 வயதான இவர் ஒரு விவசாயி. தனது ஒரு ஏக்கர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்திருந்தார்.
கடந்த ஆண்டு இரண்டு பருவமழைகளும் பொய்த்துப் போனது. மேலும் காவிரி நீரும் நமக்கு கிடைக்கவில்லை. இதனால் நீரின்றி பயிர் அத்தனையும் கருகியுள்ளது. இதனால் மன வேதனையில் ரமேஷ் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அடகு வைத்த நகை
இருக்கும் குறைந்த அளவு நீரில் பயிர் சாகுபடி செய்துவிடலாம் என்று எண்ணிய விவசாயி ரமேஷிற்கு இது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் நகைகளை அடகு வைத்தே விவசாயத்திற்கான செலவுகளை செய்துள்ளார்.

தீக்குளித்து தற்கொலை
இந்நிலையில் விவசாயி ரமேஷ், கொல்லைப்புறத்திற்கு சென்று மண்ணெண்ணெய் தனது உடல் மேல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிரேத பரிசோதனை
ஆனால், அவர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தற்போது அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர் தற்கொலை
இந்த தற்கொலை பற்றி குடவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சி பலியாகியுள்ள நிலையில், ரமேஷின் இறப்பு விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications