"2 முறை போர் போட்டும் வெள்ளாமைக்கு தண்ணி வரலையே” - விரக்தியில் விஷம் குடித்த மதுரை விவசாயி மரணம்!
மதுரை: மதுரை மாவட்டத்தில் விவசாயத்திற்காக இரண்டு முறை போர் போட்டும் தண்ணீர் வராத காரணத்தினால் விரக்தியடைந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பால்ராஜ். இவர் தனது 6 ஏக்கர் நிலத்தில் அவரை சாகுபடி செய்திருந்தார். இதற்கு தண்ணீர் குறைந்த காரணத்தினால் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி போர் போட்டிருக்கிறார். ஆனால் போர் போட்ட இடத்தில் தண்ணீர் வரவில்லை.

இந்நிலையில் அவர் நேற்று இரவு போர் போட்ட இடத்திலேயே விஷம் அருந்தி மயக்க நிலையில் கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் இதனை பார்த்து, உடனே உசிலம்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பால்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடும் வறட்சியில் தவிக்கும் உசிலம்பட்டி பகுதியில் தண்ணீர் தேவைக்காக இருமுறை தன்னுடைய நிலத்தில் விவசாயி பால்ராஜ் போர் போட்டிருக்கிறார். இரண்டு முறை முயற்சிக்கு பிறகும் தண்ணீர் வராத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகின்றது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications