2009ல் நாடு முழுக்க விவசாய கடனை காங். அரசு தள்ளுபடி செய்ததே.. மத்திய அரசுக்கு அய்யாகண்ணு கேள்வி
சென்னை: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் போராட்டம், தொடரும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காகவே டெல்லிக்கு போராடம் நடத்த வந்தோம்.
2009ல் காங்கிரஸ் அரசு நாடு முழுவதிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்தது. ஏன் இப்போது மட்டும் அதை செய்ய முடியாதா? கார்பொரேட் கம்பெனிகளுக்கு ரூ.3லட்சம் கோடிக்கு கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, எங்களுக்கு 72 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்ய கூடாதா, கார்பொரேட் கம்பெனிக்கு எப்படி கொடுத்தது.

நிதி அமைச்சர் உறுதிமொழியை எழுதி கொடுத்தால்தான் எங்கள் போராட்டம் வாபஸ் ஆகும். அல்லது, சாகும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக விவசாயிகளை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். போராட்டத்தை கைவிட கோரிக்கைவிடுத்தார். ஆனால் இதை அய்யாக்கண்ணு ஏற்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications