கட்டளை கால்வாயில் நீர் திறக்க கோரி தஞ்சை விவசாயிகள் சாலை மறியல்... போக்குவரத்து பாதிப்பு
தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டளை கால்வாயில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் செங்கிப்பட்டியில் உள்ள கட்டளை கால்வாயில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட கோரி பொது பணித் துறையினரிடம் விவசாயிகள் கோரி வந்தனர்.

ஆனால் இது வரை திறந்துவிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர். அப்போது அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் திருச்சி, சேலம், கோவை செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் வாகனங்கள் வரிசைக் கட்டிக் கொண்டு நிற்கின்றன.
இதேபோல் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெரியாறு பிரதான கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்து விட கோரி மேலூர் விவசாயிகள் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூடாரம் அமைத்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications