For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு: உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனே செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

தேனி: முல்லைப் பெரியாறு அணையில் நீர் அளவை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்ற அளித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அணை தொடர்பாக கேரளா அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Farmers demand implement of SC Judgment on Mullai periyar dam

இந்த தீர்ப்பை தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் வரவேற்றுள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இத் தீர்ப்பின் மூலம் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று முல்லைப் பெரியாறு அணை மீட்புக்குழு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

English summary
Members belonging to various farmers' associations and the local people in Tamilnadu had urged to implement the Supreme Court Judgment on the Mullaperiyar dam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X