நெருங்கி வரும் ஓணம் - தக்காளி விலை சரிவால் கலங்கும் விவசாயிகள்
நெல்லை: ஓணம் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தக்காளி விலை திடீர் சரிவை சந்தித்துள்ளதால் நெல்லை மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. சமீபகாலமாக இங்கு போதுமான தண்ணீர் இல்லாததால் சாகுபடி கேள்விகுறியாகி விட்டது.
இ

ந்த பகுதியில் தற்போது தக்காளி பயிரிட்டுள்ளனர். குறிப்பாக பாவூர்சத்திரம், ஆயிரப்பேரி, கீழப்பாவூர், ஆலங்குளம், சாலைபுதூர், மீனாட்சிபுரம் உள்பட பல கிராமங்களில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கேரளாவில் 6ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு பயிரிடப்பட்ட காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தக்காளி விலை கடந்த இரண்டு தினங்களாக சரிந்து வருகிறது.
கடந்த வாரம் இந்த பகுதியில் தக்காளி விலை கிலோ ரூ.25 வரை கொள்முதல் செய்து வந்த நிலையில் மாலை ரூ.5 முதல் ரூ.6 வரை கொள்முதல் செய்தனர். இது இன்று காலை மேலும் குறைந்தது. வெறும் கிலோ ரூ.3க்கு தக்காளியை வாங்க வியாபாரிகள் தயாராக இருந்தனர்.
இதை கேட்டு தக்காளி்யை பயிரிட்ட விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் பல விவசாயிகள் தக்காளி விலை குறைந்ததால் அதை பறிப்பதை நிறுத்தி வைத்தனர். விலை போகாத தக்காளியை கழுநீர்குளம் பகுதியில் சாலையோரம் குவியல் குவியலாக கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து சில விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே தண்ணீர் இல்லாததால் தக்காளி பயிரிட மிகவும் சிரமப்பட்டோம். தற்போது லாரி தண்ணீர் ரூ.400க்கும் மேல் கொடுத்து நீர் பாய்ச்சினோம். இதில் பலர் கடன் வாங்கி பயிர் செய்துள்ளனர். இப்படி இருந்தும் விலை குறைந்தது எதனால் என்று தெரியவில்லை.
இனிமேல் விலை உயர்ந்தால் மட்டுமே தக்காளியை பறிப்போம். இல்லாவிட்டால் அப்படியே விலை நிலங்களில் போட்டு விடுவோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications