நெருங்கி வரும் ஓணம் - தக்காளி விலை சரிவால் கலங்கும் விவசாயிகள்
நெல்லை: ஓணம் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தக்காளி விலை திடீர் சரிவை சந்தித்துள்ளதால் நெல்லை மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. சமீபகாலமாக இங்கு போதுமான தண்ணீர் இல்லாததால் சாகுபடி கேள்விகுறியாகி விட்டது.
இ

ந்த பகுதியில் தற்போது தக்காளி பயிரிட்டுள்ளனர். குறிப்பாக பாவூர்சத்திரம், ஆயிரப்பேரி, கீழப்பாவூர், ஆலங்குளம், சாலைபுதூர், மீனாட்சிபுரம் உள்பட பல கிராமங்களில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கேரளாவில் 6ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு பயிரிடப்பட்ட காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தக்காளி விலை கடந்த இரண்டு தினங்களாக சரிந்து வருகிறது.
கடந்த வாரம் இந்த பகுதியில் தக்காளி விலை கிலோ ரூ.25 வரை கொள்முதல் செய்து வந்த நிலையில் மாலை ரூ.5 முதல் ரூ.6 வரை கொள்முதல் செய்தனர். இது இன்று காலை மேலும் குறைந்தது. வெறும் கிலோ ரூ.3க்கு தக்காளியை வாங்க வியாபாரிகள் தயாராக இருந்தனர்.
இதை கேட்டு தக்காளி்யை பயிரிட்ட விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் பல விவசாயிகள் தக்காளி விலை குறைந்ததால் அதை பறிப்பதை நிறுத்தி வைத்தனர். விலை போகாத தக்காளியை கழுநீர்குளம் பகுதியில் சாலையோரம் குவியல் குவியலாக கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து சில விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே தண்ணீர் இல்லாததால் தக்காளி பயிரிட மிகவும் சிரமப்பட்டோம். தற்போது லாரி தண்ணீர் ரூ.400க்கும் மேல் கொடுத்து நீர் பாய்ச்சினோம். இதில் பலர் கடன் வாங்கி பயிர் செய்துள்ளனர். இப்படி இருந்தும் விலை குறைந்தது எதனால் என்று தெரியவில்லை.
இனிமேல் விலை உயர்ந்தால் மட்டுமே தக்காளியை பறிப்போம். இல்லாவிட்டால் அப்படியே விலை நிலங்களில் போட்டு விடுவோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications