காவிரி: தஞ்சாவூரில் இளைஞர்கள், கிராம மக்கள் திடீர் போராட்டம்-பரபரப்பு
தஞ்சையில் விவசாயிகள், இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: காவிரி விவகாரம் தொடர்பாக தஞ்சையில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் இளைஞர்களும், கிராம மக்களும் ஒன்றிணைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூரில் விவசாயிகள் தஞ்சை-திருச்சி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அலட்சியத்தை கண்டித்தும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தஞ்சை-திருச்சி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இதையடுத்து தஞ்சை-திருச்சி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications