மோடியை நம்புவதை விட சாவதே மேல்.. விவசாயிகள் கால வரையற்ற உண்ணாவிரதம்!
சென்னை: காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டதைக் கண்டித்து சென்னை விருந்தினர் மாளிகை முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றாக கருத வேண்டிய மத்திய அரசு, கர்நாடகத்திற்கு சார்பாக நடந்து கொள்கிறது.

இதனால் தமிழக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசின் கர்நாடக அரசு சார்பு போக்கைக் கண்டித்து இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதம் குறித்து பி.ஆர். பாண்டியன் கூறியிருப்பதாவது:
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. தமிழகத்திற்கு காவிரியின் மீதுள்ள உரிமையை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவிரி பிரச்சனையில் உறுதியான தீர்வை மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தில் நடந்த வன்முறையில் உடைமைகளை இழந்த தமிழர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க முடியாது என்று கூறி விட்டது மோடி அரசு. மோடியை நம்புவதை சாவதே மேல் என்ற நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டு விட்டார்கள். மோடி நாடாளுமன்றத்திற்குத்தான் பிரதமர், இந்த நாட்டுக்குத்தான் பிரதமர். ஆனால்அவர் உச்சநீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டர் என்பதை மோடி உணரத் தவறியதால்தான் இந்த நிலை எங்களுக்கு வந்துள்ளது.
7ம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழகம் முழுவதும் போராட்டக் களத்தி்ல்இறங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications