சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. விளை நிலத்தில் நட்டுவைக்கப்பட்ட கல்லை பிடுங்கி எறிந்து போராட்டம்!
சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
Recommended Video
சேலம்: எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கத்தில் விவசாயிகள் விளை நிலத்தில் நட்டுவைக்கப்பட்ட கல்லை பிடுங்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று இரண்டாவது நாளாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நிலத்தை அளந்து நட்டு வைத்திருந்த கல்லையும் அவர்கள் பிடுங்கி எறிந்தனர்.
நிலம் எடுப்பதாக முன்கூட்டியே ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து விவசாயிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதேபோல் விவசாயிகள் எதிர்ப்பு குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.