மனைவியை மறக்க முடியவில்லை.. 2 பிள்ளைகளை தூக்கில் மாட்டி கொலை.. தானும் தற்கொலை.. நாமக்கல்லில் சோகம்
மனைவி இழந்த சோகத்தில் 2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Recommended Video

நாமக்கல்: மனைவி இறந்த சோகம் தாங்க முடியாமல் 2 குழந்தைகளை கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.
காவக்காரன்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். 37 வயதான இவர் ஒரு விவசாயி. திருமணமாகி 7 வயதில் வீரபத்திரன் என்ற மகனும், 4 வயதில் விஜயா என்ற ஒரு மகளும் உள்ளனர். ஆனால் 3 வருடத்திற்கு முன்பு மனைவி இறந்துவிட்டார். இதனால் 2-வது திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜகோபாலின் தந்தை வெள்ளையன் வற்புறுத்தியும் அதற்கு ராஜகோபால் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் இரவு ராஜகோபாலன் தனது குழந்தைகளுடன் வீட்டிற்குள்ளும், வெள்ளையன் வீட்டிற்கு வெளியேயும் படுத்திருந்தனர். காலையில் தூங்க எழுந்த வெள்ளையன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 3 பேரையும் காணவில்லை. பல இடங்களில் அவர்களை தேடி வந்தநிலையில், 3 பேரும் விவசாய கிணற்று பகுதியில் மரத்தினில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.
வெள்ளையன் விரைந்து சென்றுபார்த்தபோது, 3 பேரும் வேப்பமரத்தில் சடலமாக தொங்கியபடி கிடந்தனர். அதிர்ச்சியடைந்து கதறி அழுத வெள்ளையன் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ராஜகோபால், தூங்கி கொண்டிருந்த தனது குழந்தைகளை தோட்டத்துக்கு அழைத்து சென்று, அவர்களை தூக்கு மாட்டி கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தூக்கில் தொங்கி உயிரை விட்டது தெரியவந்தது. மனைவியின் மீது அதிக பிரியம் வைத்திருந்ததாலும், அவரை பிரிந்து வாழ முடியாது என்பதாலும் ராஜகோபாலன் இந்த முடிவை எடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications