பெற்ற மகளை ஒரு வருடமாக பலாத்காரம் செய்த தந்தைக்கு 10 வருடம் சிறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே கடந்த ஒரு வருடமாக பெற்ற மகளை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தி வந்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு தற்போது நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, அனகாபுத்தூர் அயோத்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சோழராஜன். 43 வயதாகும் இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேன் ஆக இருந்து வந்தார். இவரது மனைவி பெயர் வசந்தா. வசந்தா 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இத்தம்பதிகளுக்கு 15 மற்றும் 13 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இருவரும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது வேலை முடிந்து வீடு திரும்பும்போது குளிர்பானம் வாங்கி வருவது வழக்கம். வீட்டுக்கு வந்ததும். அதில் மயக்க மருந்தைக் கலந்து பெரிய மகளுக்குக் கொடுத்து அவர் மயங்கியதும், பெற்ற மகள் என்று கூடப் பாராமல் அவரை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக இந்த அக்கிரமத்தைச் செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி இதேபோல தனது 2வது மகளிடமும் நடக்க முயன்றபோது அவர் தடுத்துத் தப்பி விட்டு பள்ளிக்குப் போய் விட்டார். அங்கு தனது ஆசிரியையிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறார் பாதுகாப்பு சைல்டன் லைன் எண்ணுக்கு ஆசிரியை தகவல் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து சோழராஜன் மீது தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. புகாரின் பேரின் சோழராஜன் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட் நீதிபதி ஆனந்தி, சோழராஜனுக்கு, முதல் மகளை பலாத்காரம் செய்ததற்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 2வது மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார். இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+