ஓயாத 'அரண்மனை சதி' - வளர்ப்பு மகன் மீது 'செட்டிநாட்டு அரசர்' எம்.ஏ.எம். ராமசாமி கொலை முயற்சி புகார்!
சென்னை: சொத்தை அபகரிப்பதற்காக வளர்ப்பு மகன் தம்மை வீடு புகுந்து கொலை செய்ய முயற்சித்ததாக 'செட்டிநாட்டு அரசர்' தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி புகார் தெரிவித்துள்ளார்.
செட்டிநாட்டு அரசரும் தொழிலதிபருமான எம்.ஏ.எம். ராமசாமி 20 ஆண்டுகளுக்கு முன்னர் வளர்ப்பு மகனாக அய்யப்பன் என்பவரை தத்தெடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக அய்யப்பனுக்கும் எம்.ஏ.எம். ராமசாமிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த மோதல் வெடித்து அம்பலமானது. வளர்ப்பு மகன் அய்யப்பன் மீது எம்.ஏ.எம். ராமசாமி போலீசில் புகார் கொடுத்தார். அவர் தமது சொத்துகளை அபகரிப்பதாகவும் எம்.ஏ.எம். ராமசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து எம்.ஏ.எம். ராமசாமியை பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருந்து அய்யப்பன் கழற்றிவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை எம்.ஏ.எம். ராமசாமி சந்தித்து கூறியதாவது:
அய்யப்பனுக்கு 90 சதவிகித சொத்துக்களை கொடுத்துவிட்டேன். எஞ்சியுள்ள சொத்தை அபகரிக்க அவரும் அவரது ஆட்களும் வீடு புகுந்து கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் அவரும் அவரது ஆட்களும் என்னுடைய வீட்டில் புகுந்து வேலையாட்களை அடித்து காயப்படுத்தியதுடன் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து நாசமாக்கியுள்ளனர்.
அய்யப்பன் என்னுடைய வளர்ப்பு மகனே கிடையாது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு எம். ஏ. எம். ராமசாமி கூறினார்.
இதனைத் தொடர்ந்து எம்.ஏ.எம்.ராமசாமி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, அய்யப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில், எம்.ஏ.எம். ராமசாமி வீட்டில் பணிபுரிந்த பணியாட்கள் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications