ஜெயா டிவியில் அரை மணிநேரம் 'அம்மா' நியூஸ் மட்டுமே வாசித்த பாத்திமா பாபு
சென்னை: ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் செய்தியை மட்டுமே அரை மணிநேரம் வாசித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் மக்களின் முதல்வரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயா டிவியில் இன்று மதியம் 1 மணிக்கு செய்திகள் ஒளிபரப்பானது.
பாத்திமா பாபு
நடிகையும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு இன்றைய செய்திகளை வாசித்தார்.
மக்களின் முதல்வர்
அரை மணிநேரம் அவர் செய்தி வாசித்தார். அரை மணிநேரமும் மக்களின் முதல்வர் பிறந்தநாள் செய்தியை மட்டுமே வாசித்தார் பாத்திமா பாபு.
ஓ.பி.எஸ். முதல்வர் இல்லையா?
மக்களின் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கழக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார் என்று பாத்திமா பாபு செய்தி வாசித்தார். கழக பொருளாளரா? அவர் தமிழக முதல்வர் அல்லவா?
திரும்பத் திரும்ப
அரை மணிநேரமும் பாத்திமா பாபு மக்களின் முதல்வர், மக்களின் முதல்வர் என்ற வார்த்தையை மட்டும் பல முறை கூறிவிட்டார்.
ஜெயா பிளஸ்
ஜெயா பிளஸ் தொலைக்காட்சி சேனலில் மக்களின் முதல்வர் பிறந்தநாள் செய்திகளுக்கு இடையே பிற செய்திகள் வாசிகப்படுகிறது.