ஸ்ரீநகருக்கு செல்லும் கமாண்டன்ட் பாலிக்கு இன்று கோவையில் பிரிவு உபச்சாரம்!
கோவை: கோவையில் உள்ள அதிரடிப் படையில் பணியாற்றி வந்த கமாண்டன்ட் பி.பி. பாலி ஸ்ரீநகருக்கு மாற்றலாகி செல்வதால் அவருக்கு இன்று மாலை பிரிவு உபச்சாரம் அளிக்கப்படுகிறது.
கோவையில் உள்ள 105 பிஎன் அதிரடிப் படையில் பணியாற்றி வந்தவர் கமாண்டன்ட் பி.பி. பாலி. அவருக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகருக்கு மாற்றல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ஸ்ரீநகர் கிளம்ப உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இன்று மாலை 4.30 மணிக்கு பிரிவு உபச்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு சிறுதுளி, இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ், லயன்ஸ் டிஸ்ட்ரிக்ட் 324 பி5, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத், லீட் இந்தியா 2020, டாஸ்க், ராக், ரிதம்ஸ், ஜமாஅத் இஸ்லாமிக் ஹிந்த், யூத் பவுன்டேஷன், சர்வதேச சகோதரத்துவ சங்கம் ஆகியை கேட்டுக் கொண்டுள்ளன.
நிகழ்ச்சியில் லீட் இந்தியா 2020 தலைவர் சி.ஜி.எஸ். மணியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கமாண்டன்ட் பாலி உரை நிகழ்த்த உள்ளார். சிறுதுளியைச் சேர்ந்த தருண்ஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
வி. நந்தகுமாரின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications