மயிலாடுதுறையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன்.. தொலைந்த வாழ்க்கை.. அறிய வேண்டிய பாடம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே வகுப்பறையில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மாணவனும், மாணவியும் கடந்த ஒரு ஆண்டாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பமாக உள்ளார். இப்போது சக மாணவன் காதல் காரணமாக வாழ்க்கையை தொலைத்து போக்சோவில் உள்ள போயிருக்கிறார்.
இன்றைக்கு பதின் பருவ காதலில் விழும் மாணவ மாணவிகள், அதனால் வாழ்க்கையையே தொலைத்து விடுகிறார்கள். அழகான பையன், ஸ்டைலான பைக் டிரைவிங், பின்னாலேயே சுற்றுவது போன்ற மூன்று தகுதி இருந்தாலே சில 2கே கிட்ஸ் மாணவிகள் காதலிக்க தொடங்குகிறார்கள். அந்த காதல் கடைசியில் இருவருக்கும் இடையே உறவில் முடிகிறது. இதனால் கர்ப்பமாகும் மாணவி, குழந்தை பெற்றுக் கொண்டு, அதனால் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வாழவேண்டும் என்று பெற்றோர் ஆசைப்பட்டார்களோ, அத்தனையும் கிடைக்காமல் வாழ்க்கையை தொலைக்கிறார்.

அதேபோல் கர்ப்பமாக்கிய சக மாணவனும், எதிர்காலம் பற்றி எந்த புரிதலும் இல்லாமல் காதல் தான் உலகில் எல்லாம் என்று நினைத்து சுற்றி, கடைசியில் கம்பி எண்ணி வாழ்க்கையை தொலைக்கிறார். இதையறிந்து தான் பதின் பருவ காதல் விவகாரத்தில், சட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பதின் பருவ காதலால் வாழ்க்கையை தொலைத்த மாணவ மாணவிகளை பற்றி பார்ப்போம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே வகுப்பறையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மாணவனும், மாணவியும் கடந்த ஒரு ஆண்டாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மாணவியின் பெற்றோர் அவளை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை அறிந்த அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் நேரில் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மாணவியின் கர்ப்பத்துக்கு அவளுடன் படித்து வரும் சக மாணவன் தான் காரணம் என தெரியவந்தது. இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மாணவனை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.
மாணவர்கள் காதல் விவகாரத்தில் ஈர்க்கப்பட்டது குறித்து தெரிந்தால் பெற்றோர் கவனமாக கையாள வேண்டும். இனக்கவர்ச்சியால் வரும் ஈர்ப்பை காதல் என்று நம்பி ஏமாறுவதை தடுக்க பெற்றோர் தான் பிள்ளைகளுடன் நட்புடன் பழக வேண்டும். வெளிப்படையாக பிள்ளைகள் தங்களிடம் சொல்லும் அளவிற்கு அவர்களை அணுக வேண்டும். இல்லாவிட்டால் காதல், கல்யாணம், கர்ப்பம் என்று வாழ்க்கையில் சிக்கலான நிலையை அடைந்த பின்னரே தெரிவிப்பார்கள். பல இடங்களில் சிக்கலை பார்க்கும் பெற்றோர், ஆசிரியர்களிடையே அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications