தொடர் திருவிழா எதிரொலி: நெல்லையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
தொடர்ச்சியாகத் திருவிழாக்கள் வந்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் திணறிப் போயுள்ளனர்.
நெல்லை: தொடர்ச்சியாகத் திருவிழாக்கள் வந்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் விலை உயர்வு வாடிக்கையாளர்களைத் திணறடித்துள்ளது.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று சுதந்திர தின விழாவும் நடக்கிறது. இதன் காரணமாக பூக்கள் விலை அனைத்துப் பகுதிகளிலும் உயர்ந்துள்ளது. நெல்லை, பாளை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக ரூ.300க்கு விற்பனையான மல்லிகைப் பூ விலை மாலை திடீரென ரூ.500க்கு உயர்ந்தது. இதேபோல் பிச்சி பூ விலையும் ரூ.600க்கு எகிறியது.

கனகாம்பரம் விலை ரூ. 600லிருந்து ரூ.650 வரை விற்கப்பட்டது. மேலும் கேந்தி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.50, வாடா மல்லி ரூ.50, ரோஸ் ரூ.100, கொழுந்து ரூ.200, வில்வம் ரூ.200 உள்படப் பல வகை பூக்களின் விலை உயர்ந்ததால் பொது மக்கள் திணறினர்.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், " நெல்லை மாவட்டத்தில் மழை இல்லாத நிலையிலும் பூக்கள் வரத்துக்குக் குறைவில்லை. இருப்பினும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பலர் பூக்களை மொத்தமாக கொள்முதல் செய்ததால் அனைத்துப் பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது.
இன்று சுதந்திர தினம் என்பதால் ரோஸ் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது." என்று தெரிவித்தனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications