Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவில் விழாவில் பூசாரி உயிரிழந்ததால் பரபரப்பு: புதுக்கோட்டையில் திருவிழாக்கள் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை அய்யனார் கோயில் திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான குதிரை எடுப்புத் திருவிழா நடத்தப்படுவதும் வழக்கம்.

15 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கிய பிறகு மேற்பனைக்காடு கிராமத்தார்கள் செரியலூர் கிராமத்திற்கு வந்து மண்குதிரை செய்யும் கலைஞர்களிடம் குதிரை சிலைகள், அய்யனார் சிலை, மற்றும் கன்னிகள், பரிவார தெய்வங்கள் சிலைகள் செய்ய கேட்டுக்கு கொள்வார்கள். அதன் பிறகு சிலைகள் களிமண்ணில் செய்து வர்ணம் தீட்டப்பட்ட நிலையில் குதிரை எடுப்புத் திருவிழா நடத்தப்பட்டது.

Festivals in Pudukkottai parking

மேற்பனைக்காடு கிராமத்தார்கள் சொன்னபடி செய்யப்பட்ட சிலைகளை தூக்கிச் செல்ல நேற்று மாலை வந்தனர். அதன் பிறகு குதிரை சிலைகள், அய்யனார் சிலை மற்றும் சுவாமி சிலைகளை பலர் தூக்கிச் செல்லும் விதமாக கம்புகள் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு ஆட்டம் பாட்டம், வானவேடிக்கைகளுடன் தூக்கிச் சென்றனர்.

சிலைகளை பொதுமக்கள் தூக்கிய போது மேற்பனைக்காட்டில் இருந்து வந்திருந்த பூசாரி ராசேந்திரன் (50). சாமியாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் போது மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனால் திருவிழாவும் நிறுத்தப்பட்டது. மேலும் இன்று நடக்க இருந்த பாட்டவசுவாமி கோயில் கல்லுப் பொங்கல் விழா, கிடா வெட்டு, குறி சொல்லுதல் போன்ற நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+