For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில் அடிதடி.. எடப்பாடி- டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கடும் மோதல்

ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி- டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி- டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது.

சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது.

Fight between Dinakaran group and Edappadi gropu in RK nager election campaign

இந்த நிலையில் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி- டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. கொருக்குப்பேட்டையில் பிரசாரம் செய்த இரு அணியினரும் கல்வீசி சண்டை போட்டுள்ளனர்.

இந்த சண்டை காரணமாக இரு அணியிலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவுகிறது.

தற்போது இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி இருதரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் தங்கள் புகாரை ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் வழங்கினார்கள்.

English summary
Fight between Dinakaran group and Edappadi gropu in RK nager election campaign. Both team has filed complaint against each other in RK Nager police station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X