கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்..? திருவாரூர் அருகே இரு தரப்பு மோதல்.. டி.என்.ஏ சோதனை நடத்த முடிவு
திருவாரூர் அருகே கன்றுக்குட்டிக்கு உரிமை கொண்டாடி இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கன்றுக்குட்டிக்கு டிஎன்ஏ சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திருவாரூர் : திருவாரூர் அருகே கன்றுக்குட்டிக்கு உரிமை கொண்டாடி இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கன்றுக்குட்டிக்கு டிஎன்ஏ சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது மாடுகள் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் மேய்ந்து வரும். பிறகு மாடுகளை மாலையில் வீட்டில் சேர்ப்பார்.

கடந்த 27ம் தேதி மதியழகன் வீட்டிற்கு சென்ற ஜாம்புவான்னோடை தெற்கு தெருவை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் மதியழகன் வீட்டில் இருந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கற்றுக்குட்டி ஒன்றை பார்த்து இது தன்னுடைய கன்றுக்குட்டி என்று உரிமை கொண்டாடினர்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். இதனை விசாரித்த போலீசார் கன்றுக்குட்டியையும் இருவரது தாய் பசுவையும் கொண்டு வருமாறும் கூறினர். எந்த பசு பின் கன்றுக்குட்டி செல்கிறதோ அவருக்குத்தான் அந்த கன்றுக்குட்டி என்றும் கூறினர்.
அப்போது மதியழகன் பசுவுடன் கன்றுக்குட்டி சென்றது. இதனையடுத்து கன்றுக்குட்டி மதியழகனிடம் ஒப்படைக்கபட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராஜரத்தினம் தரப்பினர் மதியழகன் வீட்டிற்கு சென்று கன்றுக்குட்டியை தூக்கி சென்றுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மதியழகன் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கன்றுக்குட்டியையும் பசுவையும் பறிமுதல் செய்து இருதரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.
மேலும் கன்றுக்குட்டிக்கு கால்நடை மருத்துவக்குழுவினரால் டிஎன்ஏ பரிசோதனை செய்யவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். கன்றுக்குட்டி யாருடையது என்று உரிமையாளர்கள் போட்டிப்போடும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications