வாக்காளர் இறுதிப்பட்டியல் – நாளை தமிழகம் முழுவதும் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் இறுதி பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. மாநகராட்சி, தாலுகா அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் பார்க்கலாம்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, "இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் 5 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். புதிய வாக்காளர்களும் ஏராளமான அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் 5 ஆம் தேதி மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, தாலுகா மற்றும் தபால் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் ஜனவரி 25 ஆம் தேதி முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications