சென்னையில் லைசென்ஸ் இல்லாமல் பேனர் வைத்தா ஜெயிலுதான்- மாவட்ட நிர்வாகம் அதிரடி
சென்னை: சென்னையில் உரிமம் பெறாமல் விளம்பர பேனர் வைப்போருக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் பொறுப்பை கூடுதலாக வகிக்கும் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உரிமம் பெறாமல் வைக்கப்படும் விளம்பர பேனர்களை, போக்குவரத்து போலீசார் அகற்றி வருகின்றனர். தனியார் கட்டடங்களை கட்டும் நிறுவனங்களும், தங்களது விளம்பரங்களை வைக்க, உரிமம் பெற வேண்டும்.

உரிமம் பெறாமல் விளம்பர பேனர்களை வைக்க, கட்டட உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும், அவ்வாறு விதிமுறைகளை மீறி விளம்பர பேனர்களை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். சென்னை நகர, நகராட்சி சட்டப்படி, விளம்பர பேனர்கள் வைக்கும் உரிமம் வழங்க, சென்னை மாவட்ட ஆட்சிருக்கே தகுதி உள்ளது. விதிமுறைகள் மீறப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் பெறாமல் பேனர்கள் வைக்கப்பட்டால் 044 2526 8320 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications